இந்தியாவில் ஆன்லைன் மூலமாகப் பணம் செலுத்தும் முறை நாளுக்கு நாள் அசுர வேகத்தில் வளர்ந்து வருகிறது. வங்கி கணக்குகளுடன் நேரடியாக இணைக்கப்பட்டு, சில நொடிகளில் பாதுகாப்பாகப் பணத்தை அனுப்ப உதவுவதால், இந்த டிஜிட்டல் முறைக்கு மக்களிடம் பெரிய ஆதரவு கிடைத்துள்ளது.
இந்நிலையில், கடந்த மே மாதத்தில் இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட யுபிஐ பணப் பரிவர்த்தனைகள் இதுவரை இல்லாத அளவிற்குக் புதிய உச்சத்தைத் தொட்டு சாதனை படைத்துள்ளது. மே மாதத்தில் மட்டும் ரூ.29.90 லட்சம் கோடி பணப் பரிவர்த்தனைகள் நடைபெற்றுள்ளதாக இந்திய தேசிய பரிவர்த்தனை கழகம் (என்பிசிஐ) தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க : இனி தவறான கணக்குகளுக்கு பணம் செல்லாது : யுபிஐ பரிவர்த்தனையில் புதிய வசதி
கோடைக்காலப் பயணம் மற்றும் ஐபிஎல் போட்டிகள் காரணமாக, கடந்த மே மாதத்தில் யுபிஐ பணப் பரிவர்த்தனை முன்னெப்போதும் இல்லாத வகையில் புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
ஏப்ரல் 2026 இல் பதிவான 2,235 கோடி பரிவர்த்தனைகளை (மதிப்பு ரூ.29.03 லட்சம் கோடி) விட, மே 2026 இல் யுபிஐ பரிவர்த்தனைகள் 2,320 கோடியாக (மதிப்பு ரூ.29.90 லட்சம் கோடி) உயர்ந்து புதிய வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளது.
