வேளச்சேரி – பரங்கிமலை ரயில் சேவை இன்று தொடங்கியது!

வேளச்சேரி – பரங்கிமலை இடையே நீட்டிக்கப்பட்ட பறக்கும் ரயில் சேவை இன்று அதிகாலை முதல் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

இந்த வழித்தடத்தில் கடற்கரை – பரங்கிமலை இடையே இரு மார்க்கங்களிலும் மொத்தம் 86 ரயில்கள் இயக்கப்படுகின்றன. மேலும் கடற்கரை – வேளச்சேரி இடையே இரு மார்க்கங்களிலும் 4 ரயில்கள் இயக்கப்படுகின்றன. அதேபோல் பரங்கிமலை – வேளச்சேரி இடையே இரு மார்க்கங்களிலும் 6 ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதனால் மொத்தம் 96 ரயில்கள் இந்த வழித்தடத்தில் இயக்கப்படவுள்ளன.

ஆதம்பாக்கம் ரயில் நிலையத்தில் மட்டும் தற்போது ரயில்கள் நிற்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விரைவில் இந்த சேவை முழுமையாக செயல்படுத்தப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

RELATED NEWS

Latest News