தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவரான கே. அண்ணாமலை, கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்திருந்த நிலையில், அவரது ராஜினாமாவை பாஜக தேசிய தலைமை தற்போது அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொண்டுள்ளது.
கரூர் மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை. கர்நாடகாவில் ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றிய இவர் 2019ம் ஆண்டு ஐபிஎஸ் பதவியை ராஜினாமா செய்தார். பின்னர், பாஜகவில் இணைந்த அண்ணாமலை 2021 முதல் 2025 வரை தமிழக பாஜக தலைவராக செயல்பட்டார்.
இது தொடர்பாக டெல்லிக்குச் சென்ற அவர், கட்சியின் தேசியத் தலைவரை நேரில் சந்தித்து ஐந்து பக்கங்கள் கொண்ட தனது விரிவான ராஜினாமா கடிதத்தைக் கொடுத்துள்ளார். அண்ணாமலை சமர்ப்பித்த பதவி விலகல் கடிதத்தை பாஜக தேசிய தலைவர் நிதின் நபின் ஏற்றுக்கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் அவர் முறைப்படி விலகியுள்ளார்.
