ஆப்ரிக்க நாடான காங்கோவில் எபோலா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது. இந்த நோயால் இதுவரை 131 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 500-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
காங்கோ சுகாதாரத் துறை அமைச்சர் கூறுகையில், மொத்தம் 513 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், உயிரிழந்தவர்கள் அனைவரும் எபோலா காரணமாகவே உயிரிழந்தார்களா என்பது குறித்து ஆய்வு நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
இதற்கு அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசி அல்லது முழுமையான சிகிச்சை முறைகள் இன்னும் கிடைக்காததால் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. மேலும், பரவல் வேகம் அதிகரித்து வருவதால் அவசர நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
