ரூ.25,000 பட்ஜெட்டில் சாம்சங்கின் புதிய 5G போன் அறிமுகம்

இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் பட்ஜெட் பிரிவை குறிவைத்து சாம்சங் நிறுவனம் புதிய கேலக்ஸி M47 5G ஸ்மார்ட்போனை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த புதிய கேலக்ஸி M47 5G ஸ்மார்ட்போன், முந்தைய M சீரிஸ் மாடல்களுடன் ஒப்பிடும்போது, இந்த போன் மேலும் மேம்பட்ட வடிவமைப்பில் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.பாதுகாப்பு அம்சமாக ஸ்மார்ட்போனின் பக்கவாட்டில் கைரேகை சென்சார் வழங்கப்படலாம். இதனால் விரைவான மற்றும் பாதுகாப்பான அன்லாக் அனுபவம் கிடைக்கும்.

செயல்திறனைப் பொறுத்தவரை, இந்த ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 6 ஜென் 3 செயலி இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனுடன் 8GB ரேம் மற்றும் 128GB உள்நாட்டு சேமிப்பு வசதி வழங்கப்படலாம். மேலும், ஆண்ட்ராய்டு 16 அடிப்படையிலான ஒன் யுஐ 8 இயங்குதளத்துடன் இந்த சாதனம் வெளியாகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

விலை விவரங்களைப் பொறுத்தவரை, கேலக்ஸி M47 5G ஸ்மார்ட்போன் ரூ.25,000-க்குள் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிவேக செயல்திறன், சிறந்த மல்டிடாஸ்கிங் அனுபவம் மற்றும் அன்றாட பயன்பாடுகளுக்கு ஏற்ற அம்சங்களுடன் உருவாகும் இந்த ஸ்மார்ட்போன், பட்ஜெட் விலையில் சாம்சங் ரசிகர்களுக்கு புதிய தேர்வாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Post

Latest News