தமிழக சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு நேற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் விஜய்யின் தவெக 108 இடங்களை கைப்பற்றி ஆட்சி அமைக்க உள்ளது. ஆளும் கட்சியாக இருந்த திமுக, பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது.
இந்நிலையில், திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநர் மாளிகைக்கு மு.க.ஸ்டாலின் அனுப்பியுள்ளார்.


