மத்திய அரசின் பாதுகாப்பு அமைச்சக கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் எல்லைப்புற சாலைகள் அமைப்பு, பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள 899 பணியிடங்களை நிரப்புவதற்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இந்த அறிவிப்பின் மூலம் வரைபட உதவியாளர், இந்தி தட்டச்சர், தொழில்நுட்ப களஞ்சிய பொறுப்பாளர், தகவல் தொடர்பு இயக்குநர், மின்சார தொழில்நுட்பப் பணியாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
பணியிடத்தைப் பொறுத்து 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு, தொழிற்பயிற்சி சான்றிதழ் மற்றும் பட்டப்படிப்பு கல்வித் தகுதி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.
விண்ணப்பதாரர்கள் 18 முதல் 27 வயதுக்குள் இருக்க வேண்டும். இடஒதுக்கீட்டு பிரிவினருக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும் அரசு விதிகளின்படி வயது வரம்பில் சலுகைகள் வழங்கப்படுகின்றன.
தேர்வு நடைமுறையில் எழுத்துத் தேர்வு, உடல் தகுதி சோதனை, திறன் மதிப்பீடு, மருத்துவ பரிசோதனை மற்றும் ஆவணச் சரிபார்ப்பு ஆகியவை இடம்பெறும்.
விண்ணப்பங்களை சமர்ப்பிக்க இறுதி நாள் ஜூலை 4, 2026 ஆகும். கூடுதல் விவரங்களுக்கு : https://bro.gov.in/என்ற தளத்திற்கு செல்லவும்.
