குடியரசு துணைத்தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் கோவை வருகை

Vice President is visit Coimbatore today

கோவை, அக்டோபர் 28:

இந்தியாவின் குடியரசு துணைத் தலைவராக தேர்வு பெற்ற பிறகு முதன்முறையாக சி.பி. ராதாகிருஷ்ணன் 3 நாள் பயணமாக கோவையை வந்தடைந்தார். செஷல்ஸ் நாட்டில் அரசு முறைப் பயணம் முடிந்து, தனி விமானத்தில் நேரடியாக கோவைக்கு இன்று காலையில் வந்தார். கோவை விமான நிலையத்தில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், அண்ணாமலை, வானதி சீனிவாசன் மற்றும் கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

கோவை கொடிசியா மைதானத்தில், ராதாகிருஷ்ணனின் குடியரசு துணைத் தலைவராக பதவியேற்பை சிறப்பிக்கும் மாநகர நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டார். பிற்பகல் கோவை மாநகராட்சி கட்டட வளாகத்தில் உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன்பின் பேரூர் மடத்திலுள்ள சாந்தலிங்க ராமசாமி அடிகளாரின் நூற்றாண்டு விழா பாராட்டு நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றினார்.

கோவை பயணத்தை முடித்தபின், அவர் திருப்பூருக்கு செல்கிறார். அங்கு திருப்பூர் குமரன், காந்தி சிலைகள் ஆகிய நினைவுகள் சென்று மலர் சூட்டுகிறார். அடுத்து, திருப்பூர் வேலாயுதசாமி திருமண மண்டபத்தில் உள்ளுவதற்காக, உள்ளூர் மக்கள் நடத்திய நிகழ்ச்சி மற்றும் மதுரையில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.

Related posts

NDA கூட்டணியில் ராமதாசை சேர்க்க 3 நிபந்தனைகள் விதித்த அன்புமணி

தி.மு.க. – காங்கிரஸ் கூட்டணி தொடருமா? – மு.க.ஸ்டாலினை சந்தித்து ப.சிதம்பரம் ஆலோசனை

கட்சி நிர்வாகிகளுடன் ராமதாஸ் முக்கிய ஆலோசனை!