நெல்லை, நவம்பர் 24:
நெல்லை மாவட்டத்திற்கு இன்று மிக கனமழை பெய்யும் என்றும், அத்துடன் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட முன்னறிவிப்பின் படி, மாவட்டம் முழுவதும் கனமழை தாக்கம் அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, தேவையில்லாமல் மக்கள் வீடுகள் வெளியில் செல்வதைத் தவிர்க்குமாறு அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
அவசரநிலைகள் ஏற்படும் பட்சத்தில், மாவட்ட கட்டுப்பாட்டு அறையை 0462–2501070 என்ற எண்ணிலும், அவசர உதவி கட்டுப்பாட்டு அறையை 1077 என்ற எணிலும் தொடர்புகொள்ளலாம் என்று நிர்வாகம் அறிவித்துள்ளது.
மழை தாக்கத்தால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, திருநெல்வேலி நகரில் மேலப்பாளையம் வழியாக தாமிரபரணி நத்தம் பாலம் அடைக்கப்பட்டு, அந்த வழியில் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.