திருப்பூர் இளம்பெண் வழக்கு: மாமியாரின் ஜாமின் மனு ஒத்திவைப்பு

tirupur girl news update

திருப்பூர், ஜூலை 9:

திருப்பூர் மாவட்டம் அவிநாசி கைகாட்டி புதூர் பகுதியைச் சேர்ந்த ரிதன்யா வரட்சணை கொடுமையால் கடந்த மாதம் ஜுன் 28-ம் தேதி தற்கொலை செய்துக் கொண்டார்.

இந்த வழக்கில் கணவர் கவின்குமார், மாமனார் ஈஸ்வரமூர்த்தி, மாமியார் சித்ராதேவி ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதில் கவின், ஈஸ்வரமூர்த்தி ஆகியோரின் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் தற்போது மாமியார் சித்ராதேவியின் ஜாமின் மனு மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதி ஜாமின் மனு மீதான விசாரணையை வரும் 11-ம் தேதிக்கு ஓத்திவைக்கப்படுவதாக உத்தரவிட்டார்.

Related posts

தஞ்சாவூரில் தவெக தலைவர் பங்கேற்க உள்ள கூட்டத்திற்கு போலீசார் அனுமதி

ஈபிஎஸ்வுடன் தொகுதி பங்கீடு பேச்சு: தென்மாவட்டங்களை குறிவைக்கும் பாஜக

டெல்லி புறப்பட்டார் எடப்பாடி பழனிசாமி!