கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் சந்தேகம் உள்ளது: ஹேமாமாலினி

Suspicious in Karur stampede: Hema Malini

கரூர், செப்டம்பர் 30:

கடந்த 27-ந்தேதி தவெக தலைவர் விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் குழந்தைகள், பெண்கள் உள்பட 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் அமைக்கப்பட்ட எம்.பி.க்கள் குழுவினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குழுவின் ஒருங்கிணைப்பாளராக உள்ள நடிகையும், பா.ஜ.க. எம்.பி. ஹேமமாலினி கூறியதாவது:

“பெரிய நடிகருக்கு சிறிய சாலை அளிப்பது நிர்வாகம் அறிந்து கொள்ள வேண்டிய விஷயம். விஜயைக் காண பெண்கள், சிறுமிகள் பலர் வந்ததால் குறுகிய இடம் கொடுக்கப்பட்டு, அவையில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. பெரிய இடம் கொடுத்திருந்தால் இத்தகைய கொடுமையான சம்பவம் இடம்பெறாது. இந்த கூட்ட நெரிசலில் சந்தேகம் உள்ளது. யார் பொறுப்பா என்பது கேள்வி எழுகின்றது. இதற்கான உண்மையான தகவல்களை நாங்கள் சேகரித்துள்ளோம்” என்று அவர் வலியுறுத்தினார்.

குழு உறுப்பினர் அனுராக் தாக்கூர், “கரூர் துயர் சம்பவத்தில் உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும். ஆளும் கட்சியும், அரசு மற்றும் தவெக கட்சியும் நியாயமான விளக்கம் வழங்க வேண்டும்” என தெரிவித்தார்.

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தின் உண்மைகளை முறையாக கண்டறிந்து நீதிமன்ற மற்றும் சமூக நியாயம் உறுதி செய்ய வேண்டும் என்பதற்கான அழுத்தம் இந்த குழுவின் விசாரணைகளால் அதிகரித்துள்ளது.

Related posts

NDA கூட்டணியில் ராமதாசை சேர்க்க 3 நிபந்தனைகள் விதித்த அன்புமணி

தி.மு.க. – காங்கிரஸ் கூட்டணி தொடருமா? – மு.க.ஸ்டாலினை சந்தித்து ப.சிதம்பரம் ஆலோசனை

கட்சி நிர்வாகிகளுடன் ராமதாஸ் முக்கிய ஆலோசனை!