சிங்காரவேலர் பிறந்தநாள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட பதிவு

Singaravelar birthday: Post released by CM Stalin

சென்னை, பிப்ரவரி 18:

‘சிந்தனைச் சிற்பி’ சிங்காரவேலர் அவர்களின் பிறந்தநாளையொட்டி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது, விடுதலைப் போராளி – இந்தியப் பொதுவுடைமை இயக்க முன்னோடி – ‘சிந்தனைச் சிற்பி’ சிங்காரவேலர் பிறந்தநாள்.

தந்தை பெரியாருடன் குடிஅரசில் இணைந்த – பேரறிஞர் அண்ணா பெரிதும் வியந்த மாமேதை சிங்காரவேலர் அவர்கள் !

சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் அவருக்குச் சிலை அமைத்து, அந்த அலுவலகத்துக்குச் ‘சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் மாளிகை’ என்றே பெயரும் சூட்டியவர் நம் தலைவர் கலைஞர்.

இந்தியாவில் முதன்முறையாக மே-1 உழைப்பாளர் நாளை செவ்வண்ணக் கொடியேற்றிக் கொண்டாடி, தொழிலாளர் நலனுக்காகத் தம் வாழ்வையே அர்ப்பணித்த சிங்காரவேலரின் புகழைத் தொடர்ந்து போற்றுவோம்! இனி வரும் தலைமுறைகளுக்குப் பாடமாகச் சொல்வோம்! என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

தஞ்சாவூரில் தவெக தலைவர் பங்கேற்க உள்ள கூட்டத்திற்கு போலீசார் அனுமதி

ஈபிஎஸ்வுடன் தொகுதி பங்கீடு பேச்சு: தென்மாவட்டங்களை குறிவைக்கும் பாஜக

டெல்லி புறப்பட்டார் எடப்பாடி பழனிசாமி!