ஈரோடு, செப்டம்பர் 05:
அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கடந்த கால அரசியல் வரலாற்றையும், பிரிந்தவர்களை மீண்டும் கட்சியில் இணைக்கும் அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளார். அந்த முயற்சி மிக நல்ல முயற்சி என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
செங்கோட்டையன், ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு கட்சியில் பிரிவினையால் ஏற்பட்ட சிக்கல்களை சமாளிக்க அவரது வாழ்க்கையில் பல தியாகங்களை மேற்கொண்டதாகவும், அதிமுக உடைந்துவிடக் கூடாது என்பதற்காக பணியாற்றி வந்தவர். 10 நாட்களில் பிரிந்தவர்கள் ஒருங்கிணைக்கப்பட வேண்டும் என்பதை தவிர்க்க முடியாத அத்தியாவசியமாக செங்கோட்டையன் கட்சி தலைமைக்கு வலியுறுத்தியுள்ளார்.
இதுவே எம்.ஜி.ஆர் தலைமை வழிகாட்டிய பாடமெனவும், வெளியே சென்றவர்களை மீண்டும் அரவணைத்தால் மட்டுமே கட்சி வெற்றி பெற முடியும் எனக் கூறியுள்ளார்.
இந்த முயற்சி குறித்து பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், “செங்கோட்டையன் கட்சியில் ஒருங்கிணைப்பு ஏற்படுத்தும் முயற்சி ஒரு நல்ல முயற்சி, அதற்கு தேவையான உதவியை தேர்தல் ஏற்படுத்தலாம். அனைவரும் ஒரணியில் இணைவோம். நிச்சயமாக பணிகள் விரைவில் நடைபெறும். ஒருங்கிணைந்தால், திமுக ஆட்சியை அகற்ற முடியும்” என கூறினார்.
இதன் மூலம் அதிமுக ஒருமையின் முக்கியத்துவம் மீண்டும் மறுபரிசீலனை செய்யப்பட்டு அரசியல் வட்டாரத்தில் பல எதிர்பார்ப்புகளை அதிகரித்துள்ளது.