சென்னை, அக்டோபர் 10:
சென்னை மாநகராட்சியில் ராயபுரம் மற்றும் திருவள்ளுவர் நகர மண்டலங்களின் தூய்மை பணிகள் தனியார் நிறுவனத்திற்கு ஒப்படைக்கப்பட்டதை எதிர்த்து, ஆகஸ்ட் 1-ஆம் தேதி 200-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் ரிப்பன் மாளிகை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டங்களில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள் ஆகஸ்ட் 13-ஆம் தேதி நள்ளிரவில் போலீசாரால் கட்டாயமாக கைது செய்யப்பட்டனர். அவர்கள் அடையாறு, கிண்டி, சைதாபேட்டை மற்றும் வேளச்சேரி உள்ள சமூக நல கூடங்களில் தங்க வைக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர். இதற்கு பல அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.
இந்த நிலையில், சென்னையின் 5 மற்றும் 6-வது மண்டலங்களில் தனியாருக்கு தூய்மை பணிகளை ஒப்படைக்க முயற்சிப்பதற்கு எதிராக போராட்டம் நடத்த முயன்ற பணியாளர்களை போலீசார் தடுத்து கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டோர் வாகனங்களில் ஏற்றப்பட்டு அருகிலுள்ள மண்டபத்தில் தங்கியுள்ளனர். ரிப்பன் மாளிகை முன்பு மீண்டும் போராட்டம் நடத்துவதாக தகவல் கிடைத்தபோது, அந்த இடத்தில் போலீசார் பலமாக இருந்து பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டு உள்ளனர்.