சென்னை, ஆகஸ்ட் 02:
தமிழக அரசு நிதி பற்றாக்குறையை கட்டுப்படுத்தி வருவாய் அதிகரிப்பில் சிறந்து விளங்கியுள்ளதாக நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
அவர், தொலைநோக்கு திட்டங்கள் செயலாக்கம் குறித்து செய்தியாளர்களிடம் கூறியதாவது, “மத்திய அரசின் நிதிப்பங்களிப்பு முறையாக இல்லாத சூழலிலும் தமிழ்நாடு அரசு சிறப்பாக அதனை எதிர்கொண்டுள்ளது. கடந்த நான்கரை ஆண்டுகளில் பல தொலைநோக்கு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு உள்நாட்டு உற்பத்தி இரட்டை இலக்களவில் வளர்ச்சி கண்டுள்ளது.”
அதன் மூலமாக வருவாய், நிதிப் பற்றாக்குறையும் 3% ஆகக் குறைக்கப்பட்டுள்ளதாகவும், பல்வேறு தேர்வாணயங்கள் மூலம் ஒரு லட்சம் பேர் வேலைவாய்ப்பை பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். உலகளாவிய தொழில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் ரூ.10.28 லட்சம் கோடி முதலீட்டும் ஈர்க்கப்பட்டு, 32.23 லட்சம் பேர் நேரடியாக மற்றும் மறைமுகமாக வேலை வாய்ப்புகள் கிடைத்துள்ளதாக கூறினார்.
தமிழ்நாட்டின் ஏற்றுமதி 52.07 மில்லியன் டாலர் உயர்ந்துள்ளது. ஏற்றுமதி தயார் நிலைக் குறியீட்டில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. அரசு வெளியிட்டுள்ள மக்களின் கல்வி, நடைபாதை, விடியல் பயணம் மற்றும் காலை உணவுத் திட்டம் போன்ற பல மக்கள் நல திட்டங்கள் பொதுமக்களிடையே தொடர்ந்து வரவேற்றவை எனவும் அவர் கூறினார்.
மேலும், வேலூர், கரூர், ஓசூர், ராமநாதபுரம் போன்ற நகரங்களில் புதிய விமான நிலையங்களை உருவாக்கும் பணிகள் முனைவுடன் நடைபெற்று வருவதாகவும், 3 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு முகாம்கள் மூலம் பணிகள் வழங்கப்பட்டுள்ளன என்றும் தெரிவித்தார். தமிழ் நாடு முழுவதும் சாலைகள், கோயில் நிலங்கள் மீட்பு, விளையாட்டு அரங்கங்கள் கட்டடம் மற்றும் கல்வி உதவித்தொகைகள் போன்ற பல்வேறு பணிகள் முன்னேற்றம் அடைந்துள்ளன.
இதன் மூலம் தமிழ்நாடு பொருளாதார வளர்ச்சியில் முன்னணி இடத்தைப் பெற்று, தொழில்துறை வளர்ச்சியிலும் அழுத்தமான முன்னேற்றத்தை காட்டுமாறு அமைச்சர் தங்கம் தென்னரசு விவரித்து உள்ளார்.