தூத்துக்குடி, ஜூலை 4:
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேக விழாவிற்காக முழுமையாக தயாராகி வருகிறது . விழாவிற்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் நகர் முழுவதும் போக்குவரத்தில் பெரிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் பேருந்துகள் பல கிலோமீட்டர் தூரத்துக்கு முன்னதாகவே நிறுத்தப்பட உள்ளதாக கூறப்படுவதால் பக்தர்கள் நெடுந்தொலைவு நடக்க வேண்டிய நிலை உள்ளது. இதனால் முதியவர்கள், குழந்தைகள், ஊனமுற்றோர்கள் என பலர் சிரமத்துக்கு ஆளாகவுள்ளதால். விழாவிற்காக அன்று ஒரு நாள் மட்டும் உள்ளூரை சேர்ந்த இளைஞர்களுக்கு பயிற்சி அளித்து பைக் டாக்ஸிக்கு அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.