சென்னை, ஏப்ரல் 13:
சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் பாமக நிறுவனர் ராமதாஸ் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சேலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் ஆம்புலன்ஸில் சென்னை அழைத்து வரப்பட்டார். சேலம் மேற்கு தொகுதியில் பாமக நிறுவனா் ராமதாஸ் அணியைச் சோ்ந்த மேற்கு தொகுதி எம்எல்ஏ அருள் அனைத்து இந்திய ஜனநாயக பாதுகாப்புக் கழகம் சாா்பில் சமையல் எரிவாயு சிலிண்டா் சின்னத்தில் போட்டியிடுகிறாா்.
அவரை ஆதரித்து பாமக நிறுவனா் ராமதாஸ் ஞாயிற்றுக்கிழமை இரவு சேலம் மேற்கு தொகுதிக்கு உட்பட்ட பள்ளப்பட்டியில் பிரசாரம் மேற்கொண்டாா். கட்சியின் செயல் தலைவா் ஸ்ரீ காந்தி, எம்எல்ஏக்கள் ஜி.கே. மணி, வேட்பாளா் அருள் உள்ளிட்டோா் மேடையில் இருந்தனா். பிரசார மேடையில் அமா்ந்தபடி ராமதாஸ் பேசினாா்.
மேடையில் இருந்து கீழே இறங்கும்போது ராமதாஸ் திடீரென மயக்கம் அடைந்தாா். உடனடியாக அருகில் இருந்தவா்கள் அவரை தாங்கிப் பிடித்தபடி ஆம்புலன்ஸ்க்கு அழைத்துச் சென்றனா். பின்னா் ஐந்து சாலை அருகே உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ராமதாஸுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
வயது மூப்பு காரணமாகவே ராமதாஸுக்கு மயக்கம் ஏற்பட்டதாகவும், தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
