சென்னை, டிசம்பர் 15:
திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை வட்டம், ரெட்டியார்பட்டி அருகேயுள்ள குலவணிகர்புரம் கிராமத்தில் ரூ.56.60 கோடியில் பொருநை அருங்காட்சியகம் கட்டப்பட்டு வருகிறது.
இதன் கட்டுமானப் பணிகள் முடிவடைந்துள்ள நிலையில், வரும் டிச. 21-ஆம் தேதி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அருங்காட்சியகத்தை திறந்து வைக்கிறார்.
தற்போது திருநெல்வேலியில் அமைக்கப்பட்டு வரும் பொருநை அருங்காட்சியகத்தில், தாமிரபரணி நதிக்கரையில் அமைந்த தமிழர்களின் நாகரிகத் தொன்மையை விளக்கும் வகையில் சிவகளை, ஆதிச்சநல்லூர், கொற்கை, துலுக்கர்பட்டி ஆகிய இடங்களில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சிகளில் கிடைத்த அரும்பொருள்களை அழகுறக் காட்சிப்படுத்த முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
வரும் டிச. 21-ஆம் தேதி பொருநை அருங்காட்சியகத்தை திறந்துவைத்துப் பாா்வையிடும் முதலமைச்சர், திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சுமார் ரூ.200 கோடியில் கட்டப்பட்டுள்ள புதிய விரிவாக்க கட்டடத்தையும் அவர் திறந்து வைத்து மக்கள் பயன்பாட்டுக்கு அா்ப்பணிக்க உள்ளார்.