புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமாரை கைது செய்ய போலீசார் தீவிரம்

Police intesity arresting Pussy Anand and Nirmal Kumar

சென்னை, அக்டோபர் 02:

கரூரில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யின் பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, போலீசார் பரபரப்பான விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். இதற்காக 5 பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை தொடர்கிறது.

இந்த வழக்கில் தமிழக வெற்றிக் கழக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் இணைப் பொதுச் செயலாளர் நிர்மல் குமார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது. இருவரையும் கைது செய்வதற்காக போலீசார் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், புஸ்ஸி ஆனந்த் மற்றும் நிர்மல் குமார் முன்ஜாமீன் மனுக்களை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ளனர். மனு விசாரணை நாளை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன்பாக இன்று இரவு இருவரையும் கைது செய்ய போலீசார் முயற்சி காட்டி வருவதாக தகவல்கள் வருகின்றன.

மேலும் இருவர் நண்பர்கள் மற்றும் துணைப் பணியாளர்களிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வீதி நேரம் கேள்வி விடித்து தொழில்நுட்ப தகவல்களையும் திரட்டியுள்ளனர். அதிகாரிகள் இதற்கான சாட்சி மற்றும் தகவல்களின் அடிப்படையில் புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமாரை பிடிக்க தனிப்படை போலீசார் அதிவேக நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

பொதுவாக இடம் தெரியாமல் மறைந்து இருப்பதாகவும் பெரிய அளவில் கட்சி நிர்வாகிகளுடன் ரகசியமாக தொடர்பில் இருக்குமாறு வெளிப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று நடந்த மாவட்ட செயலாளர் கூட்டத்திலும் அவர்கள் கலந்து கொள்ளவில்லை.

இதனால் புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமாரை கைது செய்வது எப்போது? என்பது எதிர்பார்ப்பில் உள்ளது.

Related posts

தேர்தலில் ஸ்டாலினுக்கு கிடைக்கப்போவது 2.0 அல்ல..வெறும் 0 தான்: ஈபிஎஸ் விமர்சனம்

எச். ராஜாவைச் சந்தித்து நலம் விசாரித்த ஈபிஎஸ்!

முதியோருக்கு மாதம் ரூ.2,000; அதிமுக 2-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள் அறிவிப்பு!