விழுப்புரம், ஜூலை 5:
பட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமையில், கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் வருகிற ஜூலை 8-ம் தேதி நடைபெற உள்ளது.
பா.ம.க.வில் இதற்கு முன் செயல்பட்டு வந்த தலைமை நிர்வாகக்குழுவை கலைத்து, புதிய நிர்வாக குழுவை ராமதாஸ் அண்மையில் அறிவித்தார். இந்த புதிய குழுவில் ஜி.கே. மணி, முரளி சங்கர், கரூர் பாஸ்கர், அருள், பரந்தாமன், சிவபிரகாசம், தீரன், புதா. அருள்மொழி உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். இந்நிலையில், புதிய நிர்வாக குழுவினருடன் இன்று தையலாபுரம் தோட்டத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் ஜி.கே. மணி , முரளி சங்கர் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
மேலும் இந்த ஆலோசனையில், மாநில செயற்குழு கூட்டத்தை நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி, ஜூலை 8-ம் தேதி ஓமந்தூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பா.ம.க. மாநில செயற்குழு கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.