பீகாரில் 2-ம் கட்ட சட்டசபை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியது

nomination 2nd phase of assembly elections in Bihar has begun.

பாட்னா, அக்டோபர் 14:

பீகார் மாநில சட்டசபைக்கான 243 தொகுதிகளில் அடுத்த மாதம் நவம்பர் 6 மற்றும் 11 தேதிகளில் இரு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது.

முதற்கட்டமாக 121 தொகுதிகளுக்கான வேட்புமனுகள் கடந்த அக்டோபர் 10-ஆம் தேதி தாக்கல் செய்யத் தொடங்கின. இதனைத் தொடர்ந்து 2-ம் கட்டமாக 122 தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது.

2-ம் கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி நவம்பர் 20 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோல், வேட்புமனுக்கள் திரும்பப் பெறப்பட வேண்டிய கடைசி நாள் நவம்பர் 23 ஆகும். இரு கட்டங்களிலும் பதிவான வாக்குகள் நவம்பர் 14-ஆம் தேதி எண்ணப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

பீகார் சட்டசபை தேர்தலில் பாஜகவும் ஐக்கிய ஜனதா தளமும் முக்கிய போட்டியாளராக இருக்கின்றனர்.

Related posts

திமுக – காங்கிரஸ் கூட்டணி குறித்த இறுதி முடிவு கார்கேவிடம் ஒப்படைப்பு

பிரதமா் மோடி பிப்.28-இல் தமிழகம் வருகை!

கேரளாவுக்கு ஒரு நீதி..மேற்கு வங்காளத்திற்கு ஒரு நீதியா? மம்தா பானர்ஜி ஆதங்கம்