காத்மண்டு, செப்டம்பர் 09:
நேபாளத்தில் தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை விதிமுறைகளை மீறிய இன்ஸ்டாகிராம், பேஸ்புக் முதலிய 26 சமூக ஊடக தளங்களுக்கு அரசு விதித்த தடையை எதிர்த்து அந்நாட்டில் போராட்டம் வெடித்தது.
அரசின் கடுமையான நடவடிக்கையை எதிர்த்து இளைஞர்கள் இரண்டாவது நாளாக தொடர்ந்த போராட்டத்தில் நாடாளுமன்றம், பிரதமர் மற்றும் அமைச்சர்களின் இல்லங்களுக்கு தீ வைத்தனர்.விமான நிலையம் அருகிலும் தீ வைக்க வாய்ப்புள்ளதால் விமான சேவைகள் நிறுத்தப்பட்டன.

ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு பொறுப்பேற்று, நேபாள பிரதமர் சர்மா ஒலி தனது பதவியை ராஜினாமா செய்தார். இதன் பின்னர், அதிபர் ராம் சரண் பவ்டெல் ஜானாதிபதி பதவியிலிருந்து ராஜினாமா செய்துள்ளார்.
இந்த மாற்றங்கள் நேபாள அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இதேசமயம், இந்திய அடுக்கில் உள்ள இலங்கை மற்றும் வங்கதேசம் ஆகிய நாடுகளிலும் ஆட்சிக் கலைப்புப் பிரச்சினைகள் இடம்பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.