சென்னை, அக்டோபர் 09:
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மீது காலணி வீசிய ராகேஷ் கிஷோரின் நடவடிக்கையைத் தடுக்க சென்னை உயர் நீதிமன்ற மனிதநேய வழக்கறிஞர்கள் சங்கம் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தியது.
மனிதநேய வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவர் வழக்கறிஞர் முஜிபுர் ரஹ்மான் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில், 71 வயதான ராகேஷ் கிஷோரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என விடுத்து வலியுறுத்தினர்.
மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லாஹ் கூறியதாவது, பி.ஆர்.கவாய் தலித் நீதியரசர்
பி.ஆர்.கவாய் ஆவார். அவர் மீது காலணியை வீசியவர் மீது
உச்சநீதிமன்றத்தின் நிர்வாக பிரிவு என்ன செய்திருக்க வேண்டும். கவாய் நேரடியாக புகார் அளிக்க வில்லை தான். ஆனால் நிர்வாகம் என்ன செய்ய வேண்டும். அந்த ராகேஷ் கிஷோரை வன்கெடுமை சட்டத்தின் கீழ் கைது செய்து இருக்க வேண்டும்.
இதே சம்பவம் வட இந்தியாவில் இது போன்று சாதாரண நீதியரசர் மீது இந்த தாக்குதல் நடந்திருந்தால் விட்டு இருப்பார்களா. இல்லை ஆனால் இந்த தாக்குதலை கண்டித்து முதலில் சோனியா காந்தி கண்டன அறிக்கை விடுத்தார், அடுத்து ராகுல்காந்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் கண்டன அறிக்கை விடுத்தார்கள் அதன் பின்னர் தான் ஒப்புக்குசப்பாக மோடி அவர்கள் அறிக்கையை வெளியிட்டுயிருக்கிறார். இந்த நிலை மாற வேண்டும் என்றால்
வன்கொடுமை சட்டத்தின் கீழ் ராகேஷ் கிஷோர் கைது செய்ய வேண்டும். அவர் கண்டிக்கப்பட வேண்டும். பாஜாகாவும், சங்கபரிவாரும் தொடர்ந்து அவதூறு பிரச்சினைகள் ஏற்படுத்தி வருகின்றனர். இந்த நிலை மாறவேண்டும் என்றார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் வழக்கறிஞர் பெரோஷா ஷிபான் அன்சாரி நன்றியுரை கூறினார்.