இன்றும், நாளையும் 10 நிமிடத்துக்கு ஒரு மெட்ரோ ரயில் இயக்கம்

Metro train will operate every 10 mins today and tomorrow.

சென்னை, ஜனவரி 16:

பொங்கல் பண்டிகை விடுமுறை நாட்களை ஒட்டி மெட்ரோ ரயில் சேவை ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி செயல்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி நேற்று மெட்ரோ ரயில் சேவை குறைக்கப்பட்டது. இன்றும் நாளையும் 10 நிமிடத்திற்கு ஒரு மெட்ரோ ரயில் இயக்கப்படுகிறது.

இதனையடுத்து இன்று வழக்கம்போல அதிகாலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை மெட்ரோ ரயில் இயக்கப்படுகிறது. அதிகாலை 5 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும் இரவு 8 மணி முதல் 10 மணி வரையிலும் 10 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில் இயக்கப்படும். மேலும் பகல் 12 மணி முதல் இரவு 8 மணி வரை 7 நிமிடத்திற்கு ஒரு சேவையும், இரவு 10 மணி முதல் 11 மணி வரை 15 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொங்கலை கொண்டாட பொதுமக்கள் சொந்த ஊர் சென்றதாலும் அரசு அலுவலகங்கள் அனைத்தும் மூடப்பட்டு இருப்பதாலும் சேவை குறைக்கப்பட்டு உள்ளது.

Related posts

தஞ்சாவூரில் தவெக தலைவர் பங்கேற்க உள்ள கூட்டத்திற்கு போலீசார் அனுமதி

ஈபிஎஸ்வுடன் தொகுதி பங்கீடு பேச்சு: தென்மாவட்டங்களை குறிவைக்கும் பாஜக

டெல்லி புறப்பட்டார் எடப்பாடி பழனிசாமி!