ஜாய் கிரிஸில்டாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் வழக்கு!

Madhampatti Rangaraj files case against Joy crisilda!

சென்னை, செப்டம்பர் 17:

பிரபல சமையல் கலைஞரான மாதம்பட்டி ரங்கராஜ், ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டாவுக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

சமீபத்தில் ஜாய் கிரிஸில்டா தனக்கும் மாதம்பட்டி ரங்கராஜுக்கும் திருமணமாகிவிட்டதாகவும் அவருடைய குழந்தை தனது வயிற்றில் வளர்வதாகவும் ஜாய் கிரிஸில்டா தகவல்களை வெளியிட்டிருந்தார். இந்த நிலையில் மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை ஏமாற்றியதாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ஜாய் கிரிஸில்டா புகார் அளித்திருந்தார்.

இந்த நிலையில், தன்னை பற்றி அவதூறு கருத்துகள் தெரிவிக்க ஜாய் கிரிஸில்டாவுக்கு தடை விதிக்கக் கோரியும், அவதூறாக பேசி வெளியிட்ட விடியோக்களை நீக்க உத்தரவிடக் கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மாதம்பட்டி ரங்கராஜ் மனு அளித்திருந்தார்.

இதேபோல், மாதம்பட்டி ரங்கராஜ் பங்குதாரராக இருக்கும் மாதம்பட்டி தங்கவேலு பிரைவட் லிமிட்., நிறுவனத்தை தொடர்புபடுத்தி ஜாய் கிரிஸில்டா பேசியதால், அந்நிறுவனத்துக்கு 15 நாள்களில் ரூ. 12.5 கோடி இழப்பு ஏற்பட்டதாக மற்றொரு மனுவும் அளிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தபோது, மாதம்பட்டி ரங்கராஜுக்கு எதிராக கருத்து தெரிவிக்க விரும்பினால் அவரது பெயரை மட்டும் பயன்படுத்த வேண்டும் என்று மாதம்பட்டி தங்கவேலு நிறுவனம் வாதிட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஜாய் கிரிஸில்டா தரப்பு, வெறும் ரங்கராஜ் என்றால் யாருக்கும் தெரியாது என்றும் அவரைப் பாதுகாக்கவே மாதம்பட்டி தங்கவேலு நிறுவனம் வழக்கு தொடர்ந்திருப்பதாகவும் வாதம் முன்வைக்கப்பட்டது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ஜாய் கிரிஸில்டா பேசியதால் நஷ்டம் ஏற்பட்டதற்கான ஆதாரங்களை சமர்ப்பிக்க மாதம்பட்டி தங்கவேலு நிறுவனத்துக்கு உத்தரவிடப்பட்டது.

மேலும், இரு வழக்குகளையும் சேர்த்து வருகின்ற செப். 24 ஆம் தேதி அடுத்தகட்ட விசாரணை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

Related posts

முதியோர் ஓய்வூதியத்தோடு கூடுதலாக ரூ.2000 வரவு வைப்பு – முதலமைச்சர் அதிரடி

தஞ்சாவூரில் தவெக தலைவர் பங்கேற்க உள்ள கூட்டத்திற்கு போலீசார் அனுமதி

ஈபிஎஸ்வுடன் தொகுதி பங்கீடு பேச்சு: தென்மாவட்டங்களை குறிவைக்கும் பாஜக