3
விருதுநகர், ஜூலை 22:
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோவில் தேரோட்டம் வரும் 28-ந் தேதி வெகு விமரிசையாக நடைபெறவுள்ளது. இதனை கருத்தில் கொண்டு மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா விருதுநகர் மாவட்டத்திற்கு ஜூலை 28-ம் தேதி உள்ளூர் விடுமுறையாக அறிவித்துள்ளார்.
மேலும், இந்த உள்ளூர் விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் ஆகஸ்டு 9-ந் தேதியை வேலை நாளாகவும் மாற்றியுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.