கரூர் கூட்ட நெரிசல் பலி: மத்தியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆய்வு

Karur stampede death Union Minister Nirmala Sitharaman reviews

கரூர், செப்டம்பர் 29:

கரூர் மாவட்டம் வேலுசாமிபுரத்தில் தமிழக வெற்றிக்கழகத்தின் சார்பாக பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் சம்பவத்தைப் பிறகு, மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் மத்திய இணையமைச்சர் எல். முருகன் இன்று காலை சம்பவ இடத்திற்கு நேரில் வந்து ஆய்வு மேற்கொண்டனர்.

கரூர் வேலுசாமிபுரத்தில் நேரில் ஆய்வு செய்தார். அதன் பின்னர், கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று அங்கு நெரிசலில் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு மத்திய அமைச்சர் நலம் விசாரித்தார்.

மேலும், கொழும்பு புதூர் கிராமத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்த செய்தியை அறிவித்து அவற்றின் குடும்பங்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார் நிர்மலா சீதாராமன்.

மேலும், கரூரில் 41 பேர் உயிரிழந்த இந்த கூட்ட நெரிசல் சம்பவத்திற்கு பிறகு அரசியல் தலைவர்களும் பலியான குடும்பங்களுக்கு தொடர்ந்து ஆறுதல் கூறி வருகின்றனர். கடந்த சனிக்கிழமை இரவில், வெற்றிக்கழக தலைவர் விஜய் கரூரில் பிரசார கூட்டத்தில் பேசும்போது இருந்து ஏற்பட்ட குழப்பத்தில் 41 பேர் பலியானனர், மேலும் 60க்கும் மேலோர் காயமடைந்தனர்.

Related posts

தேர்தலில் ஸ்டாலினுக்கு கிடைக்கப்போவது 2.0 அல்ல..வெறும் 0 தான்: ஈபிஎஸ் விமர்சனம்

எச். ராஜாவைச் சந்தித்து நலம் விசாரித்த ஈபிஎஸ்!

முதியோருக்கு மாதம் ரூ.2,000; அதிமுக 2-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள் அறிவிப்பு!