உடலுக்கும் கண்ணுக்கும் குளிர்ச்சி தரும் நாவல் பழம்

Java Plum that is cooling to the body and eyes

சென்னை, ஜூலை 17:

அரிய மருத்துவ குணங்களை கொண்ட நாவல் பழம், தமிழகத்தில் சாலை ஓரங்கள், குளக்கரை, ஆற்றங்கரை, தென்னிந்திய காடுகள் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக காணப்படுகிறது. ‘நாக மரம்’, ‘ஆருகதம்’, ‘நேரேடு’ உள்ளிட்ட பல்வேறு பெயர்களிலும் இதனை அழைக்கப்படும். இந்தியாவோடு இலங்கை, மியான்மார், மலேசியா போன்ற நாடுகளிலும் நாவல் மரம் அதிகம் உள்ளது.

ஜூலை, ஆகஸ்டு, செப்டம்பர் மாதங்களில் அதிகமாக கிடைக்கும் இந்த பழம் கருநீல நிறத்தில் இனிப்பு மற்றும் துவர்ப்பு கலந்த சுவையில் இருக்கும். இதற்கு மூளை பலம், கல்லீரல் நோய் நிவாரணம், சிறுநீரக இயக்க மேம்பாடு, குடல் சுகம், ஜீரணசக்தி ஆகிய பல்வேறு மருத்துவ நன்மைகள் உள்ளதாக இயற்கை மருத்தவர்கள் கூறுகிறார்கள்.

நாவல் பழச்சாறை தேனுடன் சேர்த்து குடிப்பதால் வயிற்றுக்கடுப்பு குறையும்; கசாயமாக தொடர்ந்து வேண்டுவோர் வாயுத் தொல்லை, மண்ணீரல் வீக்கம், நாள்பட்ட கழிச்சல் குறையும். மேலும், ரத்தம் சுத்தமாகவும், உடல் மற்றும் கண்களுக்கு குளிர்ச்சியாகவும் பயன்படும்.

இருப்பினும், இந்த பழத்தை அதிகமாக உண்ணும் போது சளி, காய்ச்சல் மற்றும் தொண்டைக்கட்டுதல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதை உப்புடன் சாப்பிட்டால் தொண்டைக்கட்டு ஆபத்து குறையும். கர்ப்பிணி பெண்களுக்கு ஒவ்வாமை ஏற்படுத்தக்கூடும் என்பதால் சற்றுத் தேவைப்படும்போது மட்டுமே சாப்பிட வேண்டும். நாவல் விதை பொடி, நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். ஒரே சமயத்தில் சுவை, குளிர்ச்சி, மருத்துவ நன்மை என பல்வேறு வகையில் நாவல் பழம் மக்களுக்கு பயன் அடையக்கூடியது.

Related posts

சிறுநீரை அடக்கி வைப்பது உடல்நலத்திற்கு தீங்கு: மருத்துவர்கள் எச்சரிக்கை

சமோசா, ஜிலேபி – விரைவில் சுகாதார எச்சரிக்கை பட்டியலில் சேர வாய்ப்பு

யூகலிப்டஸ் எண்ணெய் சிகிச்சையால் ரத்த சர்க்கரை அளவு குறைகிறது..