மருத்துவமனையில் இருந்தபடியே அரசுப் பணிகளை தொடர்கிறேன் – முதலமைச்சர்

I will continue my government duties while in the hospital – Chief Minister

சென்னை, ஜூலை 22:

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று காலை நடைபயிற்சி செய்வதற்கு சென்றபோது சற்று தலைசுற்றல் ஏற்பட்டதால் சென்னை ஆயிரம் விளக்கு அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனையின் முடிவில் பெரிய அளவில் எந்தவொரு சிக்கலும் காணப்படவில்லை. மருத்துவர்கள் அவருக்கு இரண்டு நாட்கள் ஓய்வு குறித்து ஆலோசனை வழங்கினர்.

இந்நிலையில் இன்று காலை 7 மணிக்கு இரண்டாவது அப்பல்லோ மருத்துவமனைக்கு அழைக்கப்பட்டு சில கூடுதல் மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுவிட்டன. மூன்று நாட்கள் முழுமையாக பரிசோதனை மற்றும் கண்காணிப்பில் இருந்து, அவர் 2 நாட்கள் ஓய்வில் இருப்பார் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

முதலமைச்சரின் குடும்பத்தினர் அவ்வப்போது மருத்துவமனைக்கு வந்து அவரை சந்தித்து கலந்துரையாடிக் கொண்டுள்ளனர். அரசு அதிகாரிகளும் அவருடன் ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.

இதனிடையே, மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளதாவது, மருத்துவமனையில் இருந்தபடியே அரசுப் பணிகளை தொடர்வதாக தெரிவித்துள்ளார். “உங்களுடன் ஸ்டாலின்” முகாம்கள் திட்டம் திட்டமிட்டபடி நடக்கிறதா, பெறப்பட்ட மனுக்கள் மற்றும் தீர்வுகளின் நிலை பற்றி தலைமைச் செயலாளரிடம் கேட்டறிந்து இருந்தேன். மக்களின் மனுக்கள் மீது எந்தவிதமான தொய்வும் ஏற்படக் கூடாது என்பதையும் நான் உறுதிசெய்துள்ளேன் என்று அவர் தெரிவித்தார்.

தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்தியின்படி, கடந்த 15-ந்தேதி முதல் தமிழகத்தில் சிறப்பாக நடைபெற்று வரும் “உங்களுடன் ஸ்டாலின்” திட்டத்தில் இதுவரை மொத்தம் 5,74,614 மனுக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் பல மனுக்களுக்கு தீர்வுகள் வழங்கப்பட்டு, அனைவருக்கும் உரிய துறைகளில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Related posts

அய்யா வைகுண்டரின் சமத்துவம் பேணுவோம்! – முதலமைச்சர் வாழ்த்து!

தஞ்சாவூரில் இன்று தவெக தலைவா் விஜய் பங்கேற்கும் கூட்டம்!

நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!