கோவை குண்டுவெடிப்பு வழக்கில் 27 ஆண்டுகளுக்கு பிறகு முக்கிய குற்றவாளி கைது

Main accused in Coimbatore blast case arrested after 27 years

கோவை, ஜூலை 10:

கோவை: 1998-ம் ஆண்டு பிப்ரவரி 14-ம் தேதி கோவையில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளி 27 ஆண்டுகளுக்கு பிறகு கைது செய்யப்பட்டுள்ளார்.

அந்த ஆண்டு பா.ஜ.க. தலைவர் லால் கிருஷ்ண அத்வானியை கொலை செய்யும் நோக்குடன் அல் உம்மா பயங்கரவாத அமைப்பினர் கோவையில் 18 இடங்களில் குண்டுவெடிப்புகளை நிகழ்த்தினர். இந்த தாக்குதலில் 58 பேர் உயிரிழந்தனர், மேலும் 150-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

இந்த வழக்கில் அல் உம்மா பயங்கரவாத அமைப்பின் தலைவர் பாஷா உள்ளிட்டோருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில், 27 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளி சாதிக் (டெய்லர் ராஜா) சத்தீஸ்கர் மாநிலத்தில் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். தற்போது அவர் பலத்த பாதுகாப்புடன் கோவைக்கு அழைத்து வரப்படுகிறார்.

Related posts

தஞ்சாவூரில் தவெக தலைவர் பங்கேற்க உள்ள கூட்டத்திற்கு போலீசார் அனுமதி

ஈபிஎஸ்வுடன் தொகுதி பங்கீடு பேச்சு: தென்மாவட்டங்களை குறிவைக்கும் பாஜக

டெல்லி புறப்பட்டார் எடப்பாடி பழனிசாமி!