தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்காக லயன்ஸ் கிளப் ஆப் சென்னை மதுரவாயல் சூப்பர் கிங்ஸ் சார்பில் சிறப்பு நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் மதுரவாயல் சூப்பர் கிங்ஸின் தலைவர் Ln. MJF E.அரசு தலைமையில் சுமார் 200-க்கும் மேற்பட்ட மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு மதிய உணவு, பரிசுகள் மற்றும் புதிய உடைகள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில் லயன்ஸ் கிளப்பின் பல்வேறு உறுப்பினர்கள், சமூக அமைப்பினரின் பிரதிநிதிகள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டு மகிழ்ச்சி தெரிவித்தனர்.
இந்த நடவடிக்கை ஊழியர்களின் அர்ப்பணிப்பை கௌரவிப்பதோடு, சமூக ஒற்றுமையை வலுப்படுத்துவதாக அமைந்தது.