சென்னை, ஜூலை 10:
சட்டவிரோத சூதாட்ட செயலிகள் விளம்பரத்தில் நடித்த பிரகாஷ் ராஜ், விஜய் தேவரகொண்டா, ராணா டகுபதி உள்ளிட்ட 29 நடிகர்கள் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
நாடு முழுவதும் சூதாட்ட செயலிகளால் பலர் பணத்தை இழந்து கடும் நெருக்கடியில் உள்ளனர். சிலர் அதிக கடன் சுமையால் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். இதனால், மத்திய அரசு சூதாட்ட செயலிகளுக்கு விளம்பரம் மற்றும் ஊக்குவிப்பை தடுக்கும் நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்த நிலையில் மத்திய நுகர்வோர் துறை அமைச்சகம் சட்டவிரோத சூதாட்ட செயலிகளுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் ஆதரவு வழங்குவோருக்கு எதிரான நடவடிக்கைகளை உத்தரவிட்டிருந்தது. ஆன்லைன் விளம்பரங்களுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.இதன் தொடர்ச்சியாக, பிரகாஷ் ராஜ், விஜய் தேவரகொண்டா, ராணா டகுபதி உள்ளிட்ட 29 நடிகர்கள் மீது அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து, விசாரணைக்காக நேரில் ஆஜராக சம்மன் அனுப்ப திட்டமிட்டுள்ளதாக என தகவல்கள் தெரிவிக்கின்றன.