15
சென்னை, ஜூலை 9:
நடிகை அருணாவின் சென்னை நீலாங்கரை வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இயக்குனர் பாரதிராஜாவின் கல்லுக்குள் ஈரம் படத்தின் முதல் தமிழ் திரையுலகில் அறிமுகமானார் அருணா.
அருணாவின் கணவர் மோகன் குப்தா, வீடுகளில் உள் கட்டமைப்பு அலங்காரப் பணிகளை மேற்கொள்ளும் நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்நிலையில், சட்ட விரோத பணப்பரிமாற்ற குற்றச்சாட்டின் கீழ் அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரது வீட்டில் காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.