சென்னை, செப்டம்பர் 15 :
பாமக தலைவராக அங்கீகாரம் பெற்ற பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணிக்கு, தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பி அதிகார பதவியை உறுதிப்படுத்தியுள்ளது. இது தொடர்பாக வழக்கறிஞர் பாலு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் பேசியதாவது, ஆகஸ்ட் 9-ந்தேதி மாமல்லபுரத்தில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளதாக அவர் தெரிவித்தார். தேர்தல் ஆணையம் அன்புமணியை 2026 வரை பா.ம.க. தலைவராக நீட்டித்துள்ளது.
மேலும், சென்னை தி.நகர் பகுதியில் உள்ள பா.ம.க. தலைமை அலுவலகத்தையே அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.அன்புமணி தான் பா.ம.க. தலைவர் என்றும், அவருக்கு பா.ம.க. சின்னமாக மாம்பழம் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது என்பது தேர்தல் ஆணையத்தின் உத்தரவும் அங்கீகார அழுத்தமும் அடிப்படையாக உள்ளது.
மேலும், பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன், பொருளாளர் திலகபாமா மற்றும் நிறுவனர் ராமதாஸ் ஆகியோரின் பதவிகளும் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக வழக்கறிஞர் பாலு கூறினார்.
இந்த அறிவிப்புக்கு பிறகே பா.ம.க.வினர் அலுவலகம் முன்பு பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கி உற்சாகம் கொண்டாடினர். மேலும் வழக்கறிஞர் பாலு கூறியதாவது, “ராமதாசின் நோக்கத்தை தொடர்ந்து நாம் பயணிக்கிறோம். அன்புமணி தலைமையிலான பாமக-வுக்கு அனைவரும் இணையுங்கள்” என அழைப்பு விடுத்துள்ளார்.