சென்னை, டிசம்பர் 08:
அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெறும் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, தேர்தல் பணிகளை தீவிரமாக முன்னெடுக்க தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று காலை 10 மணியளவில் தொடங்கியுள்ளது.
காணொலி காட்சிப் மூலம் தொடக்கப்பட்ட இந்த கூட்டத்தில் திமுக மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் செயலாளர்களுக்கு மட்டுமல்லாமல் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், தொகுதி பார்வையாளர்கள் மற்றும் தலைமை செயற்குழு உறுப்பினர்கள் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
‘என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி’ என்ற அடிப்படையில் நடத்தப்படும் இந்த ஆலோசனை கூட்டத்தில், ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் வெற்றி வாய்ப்புகளை அதிகப்படுத்துவதற்கான திட்டங்களை பரிசீலித்து வருவதுடன், சட்டமன்ற தேர்தல் தொடர்பான பல்வேறு பணிகள் விரிவாக மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.
தேர்தல் ஆணையம் ஏற்கனவே அதிகாரபூர்வமாக 2026 சட்டமன்ற தேர்தல் பணிகளை தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த கூட்டம் வரும் தேர்தலில் திமுக வெற்றியை உறுதி செய்யும் முக்கிய முயற்சியாக உள்ளது.