தொகுதிப்பங்கீடு குறித்து திமுக கூட்டணி கட்சிகள் பேச்சுவார்த்தை தீவிரம்!!

DMK alliance parties in intensive talks on seat sharing!!

சென்னை, பிப்ரவரி 28:

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் திமுகவுடன் கூட்டணி கட்சிகள் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளன.

காங்கிரஸ், மதிமுக, தமிழக வாழ்வுரிமைக் கட்சி ஆகிய கட்சியினருடன் திமுக தேர்தல் குழு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்திற்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் , காங்கிரஸ் தமிழ்நாடு மாநில தலைவர் செல்வப் பெருந்தகை, காங்கிரஸ் மாநில தேர்தல் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் ஆகியோர் வருகை தந்தனர்.

காங்கிரஸுடனான முதல்கட்ட பேச்சுவார்த்தை முடிந்து மற்ற கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது.

Related posts

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் வாழ்த்து

காங்கிரஸுக்கு ஒரு எம்.பி. சீட் தருவதாக ஸ்டாலின் உறுதி – செல்வப்பெருந்தகை

பிரதமர் மோடி நாளை மதுரை வருகை: ஏற்பாடுகள் தீவிரம்!