சென்னை, ஜூலை 8:
மத்திய தொழிற்சங்கங்கள் 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை நாடு முழுவதும் பொது வேலை நிறுத்தம் நடத்த உள்ளன. இதில் மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது.
மத்திய மற்றும் மாநில ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். தொழிலாளர்களுக்கு எதிராக அமல்படுத்தப்படவுள்ள 4 சட்ட தொகுப்புகளை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடக்கிறது. தமிழகத்தில் திமுகவின் தொழிற்சங்கமான தொ.மு.சு., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தொழிற்சங்கமான சி.ஐ.டி.யு., இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தொழிற்சங்கமான ஏ.ஐ.டி.யூ.சி., காங்கிரஸ், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் சார்ந்த 13 தொழிற்சங்கங்கள் இந்த வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளன.
இது குறித்து தமிழக தலைமை செயலாளர் முருகானந்தம், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் நாளை நடைபெறும் பொது வேலை நிறுத்தத்தில் பங்கேற்றால் சம்பள பிடித்தம் மற்றும் துறை ரீதியான கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.