3
அறுபடை வீடுகளில் 2ஆம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இன்று (15.06.2025) அதிகாலை 4 மணி அளவில் திறகப்பட்டு, விஸ்வரூப தீபாராதனையும், உதயமார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெற்றது.
சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு தமிழகம் மட்டும் இல்லாமல், வெளி மாநிலம் மற்றும் வெளி நாடுகளிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். விடுமுறை மற்றும் ஞாயிற்றுக்கிழமையான இன்று ஏராளமான பக்தர்கள் தங்களின் குடும்பத்தினருடன் வந்து கடலில் புனித நீராடி முருகப்பெருமானை தரிசனம் செய்தனர்.