தமிழகம், நவம்பர் 28:
தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கடலூர் மற்றும் திருவாரூர் ஆகிய ஆறு மாவட்டங்களுக்கு பேரிடர் மீட்புக்குழுக்கள் அனுப்பப்பட்டு செயல்படுத்தப்பட்டுள்ளன. புதுச்சேரிக்கு இரண்டு குழுக்கள் என மொத்தம் 60 பேர் மற்றும் மற்ற மாவட்டங்களுக்கு தலா ஒரு குழு ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த மீட்புப் பணிகளுக்காக, இடிபாடுகளுக்குள் சிக்கிய மக்களை விரைவில் கண்டுபிடித்து காப்பாற்ற நாய் பயிற்சி பெறுபவர்கள் ராணி, மிக்கி, லைக்கா மற்றும் ராம்போ ஆகிய நாய்களும் குழுக்களுடன் அனுப்பப்பட்டுள்ளன.
கடந்த 6 மணி நேரத்தில், 7 கி.மீ. வேகத்தில் வடக்கு-வடமேற்கு திசையில் நகரும் டிட்வா புயல் புதுவையிலிருந்து தெற்கு-தென்கிழக்கே 440 கி.மீ மற்றும் சென்னையிலிருந்து தெற்கு-தென்கிழக்கே 540 கி.மீ தொலைவுகளில் 10 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது.
இந்த புயல் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வட தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திரம் கடற்கரைகளில் தென்மேற்கு வங்கக்கடலில் கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
அதே நேரத்தில், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மாவட்டங்களில் பலத்த மழை மற்றும் மிக அதிக மழை பெய்ய வாய்ப்பு காரணமாக கடலோர பகுதிகளுக்கு ஆரஞ்சு அல்ர்ட் விடுக்கப்பட்டுள்ளது.