சென்னை, ஜூலை 11:
தமிழ்நாடு டிஜிபி சங்கர் ஜிவால் கூறியதாவது, நீண்ட காலமாக தலைமறைவாக இருந்த பயங்கரவாதிகள் மற்றும் குற்றவாளிகளை பிடிக்க ‘ஆபரேஷன் அறம்’ வெற்றிகரமாக நடைபெற்றுள்ளது. இந்த நடவடிக்கை மூலம் கோவை குண்டுவெடிப்பு வழக்கில் தேடப்பட்ட டெய்லர் ராஜா உள்ளிட்ட முக்கிய குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
டெய்லர் ராஜா கடந்த 30 ஆண்டுகளுக்குப் பிறகு கர்நாடகாவில் இருந்து தமிழ்நாடு பயங்கரவாத தடுப்புப்படை கைது செய்துள்ளார். இவர் 1998 கோவை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடையவர் மற்றும் அபுபக்கர் சித்திக் என்பவர் மீது தமிழ்நாட்டில் 5 வழக்குகள், கேரளாவில் 2 வழக்குகள் மற்றும் கர்நாடகா, ஆந்திராவில் தலா ஒரு வழக்குகள் உள்ளது. இந்நிலையில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் 24 மணி நேரத்திற்குள் நீதிமன்ற காவலுக்கு ஒப்படைக்கப்பட வேண்டும் என்றும், முதற்கட்ட விசாரணையில் சில குற்றவாளிகள் மளிகைக் கடை, தையல் கடை, துணிக்கடை மற்றும் ரியல் எஸ்டேட் போன்ற தொழில்களில் இருந்து வந்துள்ளனர்.
ஒரு வழக்கில் தொடர்புடைய 150 அல்லது 160 குற்றவாளிகள் இருந்தாலும், 2 அல்லது 3 பேர் தலைமறைவாக இருந்தாலும், அந்த வழக்கு வெற்றி பெற்றதாக கருதப்பட வேண்டும். இதுபோன்ற வெற்றிகரமான ஆபரேஷன் மூலம் தமிழகத்தில் குற்றவியல் நடவடிக்கைகள் கட்டுப்பாட்டில் இருப்பதாக அவர் தெரிவித்தார். இந்த நடவடிக்கை தமிழ்நாட்டில் சட்டம் மற்றும் ஒழுங்கை உறுதி செய்யும் முக்கிய முன்னேற்றமாக கருதப்படுகிறது. மேலும் எதிர்காலத்தில் தமிழ்நாட்டில் பயங்கரவாத செயல்பாடுகள் மற்றும் கடுமையான குற்றங்கள் நடக்காது என உறுதி செய்யப்பட்டுள்ளது.