முதலமைச்சர் இன்று ஈரோடு பயணம் – போக்குவரத்து மாற்றம்

83 fishermen arrested: CM writes to Union Minister Jaishankar!

ஈரோடு, நவம்பர் 26:

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், இரண்டு நாட்கள் அரசு சுற்றுப்பயணமாக நேற்று ஈரோடு மாவட்டத்துக்கு வந்துள்ளார். இன்று , அவர் ஈரோடு மற்றும் அருகிலுள்ள பகுதிகளில் நடைபெறும் பல அரசு திட்டங்களின் தொடக்க விழா மற்றும் நலத்திட்ட வழங்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார்.

முதலமைச்சரின் ஈரோடு பயணத்தை முன்னிட்டு, மாவட்ட காவல் துறை போக்குவரத்து கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. ஈரோடு நகரம் மற்றும் பெருந்துறை, கோபிசெட்டிபாளையம், சித்தோடு, மொடக்குறிச்சி பகுதிகளில் அவர் பயணிக்கும் முக்கிய சாலைகளில் இன்று காலை முதல் போக்குவரத்து மாற்றங்கள் அமலுக்குவருகின்றன.

முதலமைச்சர் ஸ்டாலின் இன்று காலை ஈரோடு அரசு கல்லூரி வளாகத்தில் நடைபெறும் அரசு நலத்திட்ட விழாவில் பங்கேற்கவுள்ளார். பிற்பகலில் கோபிசெட்டிபாளையம் சட்டமன்றத் தொகுதியில் புதிய அரசு மருத்துவமனை கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்வதும், பல சாலைப்பணிகளை தொடங்கிவைப்பதும் எதிர்பார்க்கப்படுகிறது.

மாவட்ட ஆட்சியர் பி.சாரங்கபாணி மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாந்தி கல்யாணசுந்தரம் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் வலுப்படுத்தப்பட்டுள்ளன. 800-க்கும் மேற்பட்ட போலீஸ் அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜாதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையை முன்னிட்டு இன்று (புதன்கிழமை) பல்வேறு இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

அதன்படி சேலத்தில் இருந்து கோவை செல்லும் கனரக வாகனங்கள் சங்ககிரியில் இருந்து திருச்செங்கோடு, கொக்கராயன்பேட்டை, திண்டல், பெருந்துறை வழியாக கோவை செல்ல வேண்டும். கோவையில் இருந்து சேலம் செல்லும் கனரக வாகனங்கள் காஞ்சிக்கோவில் பிரிவில் இருந்து கவுந்தப்பாடி, கிருஷ்ணாபுரம் பிரிவு, அம்மன் கலை அறிவியல் கல்லூரி, சித்தோடு பாலத்தில் இருந்து அதாவது ஈரோடு-சத்தி மேம்பாலம் தேசிய நெடுஞ்சாலையின் இணைப்பு சாலை, லட்சுமி நகர் வழியாக சேலம் செல்ல வேண்டும்.

மேட்டூரில் இருந்து கோவை செல்லும் கனரக வாகனங்கள் அம்மாபேட்டை, அந்தியூர், அத்தாணி, கோபி, குன்னத்தூர், பெருமாநல்லூர் வழியாக கோவைக்கு செல்ல வேண்டும். காங்கேயத்தில் இருந்து அறச்சலூர் வரும் கனரக வாகனங்கள் சென்னிமலை வழியாகவும், கந்தசாமிபாளையத்தில் இருந்து ஓடாநிலை வழியாக செல்லும் வாகனங்கள் எலவநத்தம், வடுகப்பட்டி பிரிவு வழியாகவும், வெள்ளோட்டில் இருந்து அறச்சலூர் செல்லும் வாகனங்கள் கள்ளுக்கடை மேடு, மாரியம்மன் கோவில், அவல்பூந்துறை, கனகபுரம் வழியாகவும், எழுமாத்தூரில் இருந்து ஈரோடு வரும் வாகனங்கள் சந்தை குட்டை, காசிபட்டி வழியாகவும், சென்னிமலை கைகாட்டி வழியாக அறச்சலூர் வரும் வாகனங்கள் மேற்கு தலவுமலை வழியாகவும் செல்ல வேண்டும். இந்த போக்குவரத்து மாற்றத்தை அனைவரும் கடைபிடித்து சீரான போக்குவரத்துக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுவதாக அதில் கூறப்பட்டு உள்ளது.

Related posts

தி.மு.க. – காங்கிரஸ் கூட்டணி தொடருமா? – மு.க.ஸ்டாலினை சந்தித்து ப.சிதம்பரம் ஆலோசனை

கட்சி நிர்வாகிகளுடன் ராமதாஸ் முக்கிய ஆலோசனை!

நாங்குநேரி கொலை சம்பவத்திற்கு விஜய் கடும் கண்டனம்..!