சென்னை கன்னிமாரா நூலகத்தில் கார்ல் மார்க்ஸ் சிலையை திறந்து வைத்த முதலமைச்சர்

CM unveiled the statue of Karl Marx in Chennai.

சென்னை,பிப்ரவரி 06:

கடந்தாண்டு சட்ட விதி எண் 110ன் கீழ் ரூ. 85 லட்சத்தில் கார்ல் மார்க்ஸ்சுக்கு சிலை அமைக்கப்படும் என சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில், சென்னை எழும்பூர் கன்னிமாரா பொது நூலகம், அருங்காட்சியக வளாகத்தில் கார்ல் மார்க்ஸ் சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

அப்போது கார்ல் மார்க்ஸ் பற்றிய சிறப்பு புகைப்பட கண்காட்சியையும் முதலமைச்சர் பார்வையிட்டார். இந்த நிகழ்ச்சியில் கூட்டணி கட்சி தலைவர்களான செல்வப்பெருந்தகை, வைகோ, வீரபாண்டியன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அப்போது கார்ல் மார்க்ஸ் சிலைக்கு முன்பாக கூட்டணி கட்சி தலைவர்களுக்கு மத்தியில் ‘கார்ல் மார்க்ஸ்சுக்கு வீரவணக்கம்’ என்று முழக்கமிட்டார். மேலும் இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, மேயர் பிரியா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Related posts

தஞ்சாவூரில் தவெக தலைவர் பங்கேற்க உள்ள கூட்டத்திற்கு போலீசார் அனுமதி

ஈபிஎஸ்வுடன் தொகுதி பங்கீடு பேச்சு: தென்மாவட்டங்களை குறிவைக்கும் பாஜக

டெல்லி புறப்பட்டார் எடப்பாடி பழனிசாமி!