சென்னை, நவம்பர் 1:
மக்கள் நலனுக்காக தமிழக அரசு தொடர்ந்து மேற்கொள்ளும் மருத்துவ அவசர சேவை மேம்பாட்டுத் திட்டத்தின் ஒன்றாக, புதிய 108 அவசர கால ஆம்புலன்ஸ் சேவைகள் இன்று தொடங்கப்பட்டன.
சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 87 புதிய ஆம்புலன்ஸ் வாகனங்களை கொடியசைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்காக அறிமுகப்படுத்தினார். இந்த வாகனங்கள் ரூ.18.9 கோடி மதிப்பிலானவை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் 108 அவசர சேவை அமைப்பு மாநிலம் முழுவதும் மருத்துவ அத்தியாவசிய நேரங்களில் உயிர் காக்கும் பணியில் முக்கிய பங்காற்றி வருகிறது. புதிய ஆம்புலன்ஸ் சேர்க்கையால் அந்த சேவை மேலும் வலுவடையும் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இந்நிகழ்ச்சியில் தலைமைச் செயலாளர் முருகானந்தம், சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.