சென்னை, செப்டம்பர் 22:
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஜிஎஸ்டி அலுவலகம் மற்றும் சென்னை வானிலை ஆய்வு மையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் சமீப காலமாக பள்ளிகள், அரசு அலுவலகங்கள் உள்ளிட்ட பல்வேறு அரசு மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக கடந்த காலத்தில் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு வந்த வெடிகுண்டு மிரட்டல் புரளி என்று வெளிப்பட்டது.
தற்போது மிரட்டலில் ஜிஎஸ்டி அலுவலகத்திற்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பெயரிலும், வானிலை ஆய்வு மையத்திற்கு பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் பெயரிலும் மிரட்டல்கள் வந்துள்ளன. இதையடுத்து அந்த பகுதிகளில் உள்ள ஊழியர்கள் வெளியேற்றப்பட்டு, வெடிகுண்டு நிபுணர்களும் போலீசாரும் மோப்ப நாய் உதவியுடன் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்த மிரட்டல் குறித்து போலீசாரும் விசாரித்து வருகின்றனர்.