சென்னை, அக்டோபர் 06:
இலவச கல்வி உரிமை சட்டத்தின் கீழ், தனியார் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீட்டில், எல்.கே.ஜி. முதல் 1-ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு இலவசமாக படிக்கும் வாய்ப்பு வழங்கப்படுகின்றது. இந்த திட்டத்தின் அடிப்படையில் தமிழகத்தில் ஆண்டுதோறும் சுமார் 1 லட்சம் குழந்தைகள் சேர்க்கப்படுகின்றனர்.
முக்கியமாக, கடந்த ஆண்டு மத்திய அரசு நிதி வழங்காமல் இருந்ததால் இந்த ஆண்டு புதிய சேர்க்கை நடைபெறவில்லை. எனினும் தற்போதைய நிலவரப்படி, மத்திய அரசு தமிழகத்திற்கு நிதி வழங்கியுள்ளதால், இந்தப் ஆண்டுக்கும் மாணவர் சேர்க்கை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.
காலதாமதமாக செய்யப்பட்டுள்ளதால், புதிய மாணவர்கள் சேர்க்க அதிக வாய்ப்பு இல்லை. எனினும், தற்போது தனியார் பள்ளிகளில் படித்து வரும் குழந்தைகளை RTE சட்டத்தின் கீழ் சேர்க்க அரசு உத்தரவிட்டுள்ளது.
மேலும், கல்வி கட்டணம் ஏற்கனவே பெறப்பட்டிருந்தால், அதைத் திருப்பி கொடுக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்காக அனைத்து மாவட்டங்களில் கல்வி அதிகாரிகள் மற்றும் தனியார் பள்ளி தலைமை ஆசிரியர்களின் கூட்டங்கள் நடைபெற்றுள்ளன.
அதே சமயம், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் இந்நிலையில் விருப்பமான பள்ளிகளில் எழுத்துச் சான்றிதழ் பெற்றபின் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். இந்த ஆண்டில் இணையதளம் வாயிலாக RTE மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க முடியாது என்று பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
ஆர்டிஇ தொடர்பான புகார்கள் மற்றும் மேலதிக தகவல்களை rteadmission@tnschools.gov.in அல்லது 14417 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு அறிந்துகொள்ளலாம் என தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.