பாஜக தேர்தல் பொறுப்புகளில் இருந்து அண்ணாமலை விலகல்!

Annamalai resigns from BJP election responsibilities!

கோவை, பிப்ரவரி 03:

பாஜக தேர்தல் பொறுப்புகளில் இருந்து விலகுவதாக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஓரிரு மாதங்களில் நடைபெறவுள்ள நிலையில், அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி கிட்டத்திட்ட இறுதி செய்யப்பட்டு பிரசாரத்தையும் தொடங்கியுள்ளது.

சிங்காநல்லூர், விருகம்பாக்கம் உள்ளிட்ட 6 தொகுதிகளுக்கு பாஜகவின் பொறுப்பாளராக அண்ணாமலையை நியமித்து கட்சி தலைமை உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில், தந்தைக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அவரை கவனித்துக் கொள்ள வேண்டியிருப்பதால், தேர்தல் பொறுப்புகளில் இருந்து விலகுவதாக அண்ணாமலை அறிவித்துள்ளார்.

மேலும், செய்தியாளர்களுடன் அண்ணாமலை இன்று பேசியதாவது,”பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு ஏற்றுக்கொண்ட 16-வது நிதிக்குழுவின் பரிந்துரை தமிழகம் பலன் அடைந்துள்ளது. குறிப்பாக வரி பகிர்வில் நாட்டின் வளர்ச்சிக்கு 10% நிதி ஒதுக்கீடு செய்யப்படுவது, இது எதிர்கட்சிகளின் வாயை அடைத்துள்ளது.

திமுக அமைச்சர்களை அழைத்து அண்ணாவை பற்றி 10 வரிகள் எழுதச் சொன்னால் யாருக்கும் எழுதத் தெரியாது. இன்றைக்குகூட தேர்வு வைத்து பாருங்கள், யாருக்கும் தெரியாது. அண்ணா… அண்ணா… என்று அவர் பிறந்தநாள், நினைவுநாளில் பேசுவதை மட்டுமே வாடிக்கையாக வைத்துள்ளனர்.

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில்தான் தேர்தலை சந்திக்கப் போகிறோம். அவர்தான் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர். திமுக – காங்கிரஸ் கூட்டணி உடைந்த கூட்டணி போன்றது.

விஜய் கட்சிக்கு என்ஜினே இல்லை. விஜய் கட்சியின் என்ஜினை ஓட்ட யார் இருக்கிறார்? மக்களை சிந்திக்க வைக்கும் வகையில் விஜய்யின் பேச்சு இல்லை. விசில் மற்றும் கைதட்டலுக்காகவே விஜய்யின் பேச்சுகள் இருக்கின்றன” எனத் தெரிவித்துள்ளார்.

Related posts

ஈபிஎஸ்வுடன் தொகுதி பங்கீடு பேச்சு: தென்மாவட்டங்களை குறிவைக்கும் பாஜக

டெல்லி புறப்பட்டார் எடப்பாடி பழனிசாமி!

மதுரைக்கு வந்த பிரதமர் பொய்யை அவிழ்த்துவிட்டிருக்கிறார்: மு.க.ஸ்டாலின்