திருப்பரங்குன்றம் வழக்கில் மேல்முறையீடு செய்யப்படும்: அமைச்சர் ரகுபதி

An appeal will filed in the Thiruparankundram case: Raghupathi

சென்னை, ஜனவரி 06:

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றலாம் என்று உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டது. தனி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் வழங்கிய உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்த டிவிஷன் பெஞ்ச், இந்த அதிரடி உத்தரவை பிறப்பித்தது. உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

இது தொடர்பாக அமைச்சர் ரகுபதி கூறியதாவது, “திருப்பரங்குன்றம் வழக்கில் மேல்முறையீடு செய்யப்படும். ஒருவரின் கோரிக்கைக்காக இல்லாத வழக்கத்தை நடைமுறைப்படுத்த முடியாது. தீபத்தூணில் தீபம் ஏற்ற உத்தரவு சட்டத்திற்கு முரண்பாடான செயலாகும். தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்றால் அதற்கான ஆதாரங்களை கண்டறிந்து நீதிபதிகள் தீர்ப்பளிக்க வேண்டும். உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய எங்களுக்கு உரிமை உள்ளது. வழக்கத்தில் இல்லாத ஒன்றை ஏன் நீதிமன்றம் புகுத்த வேண்டும் என்பதுதான் மக்களின் கேள்வி. 144 தடை உத்தரவு விதிக்கப்படவில்லை என்றால், அன்றே தீபம் ஏற்றும் சூழல் ஏற்பட்டிருக்கும். உச்ச நீதிமன்றத்தில் நல்ல தீர்ப்பை பெறுவோம்” என்றார்.

Related posts

நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!

NDA கூட்டணியில் ராமதாசை சேர்க்க 3 நிபந்தனைகள் விதித்த அன்புமணி

தி.மு.க. – காங்கிரஸ் கூட்டணி தொடருமா? – மு.க.ஸ்டாலினை சந்தித்து ப.சிதம்பரம் ஆலோசனை