பகவதி அம்மன் கோவிலில் குடும்பத்துடன் தரிசனம் செய்த நடிகர் அஜித்குமார்

Actor Ajith Kumar visited Bhagavathy Amman temple with his family

பாலக்காடு, அக்டோபர் 25:

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித் குமார், தன் குடும்பத்துடன் கேரள மாநிலம் ஊட்டுகுளங்கர பகவதி அம்மன் கோவிலில் இன்று காலை தரிசனம் செய்தார். இந்த தரிசனத்தின் போது எடுத்த படங்கள் சமூக ஊடகங்களில் தற்போது வைரலாகி வருகின்றன.

சமீபத்தில் வெளியான அவரது ‘குட் பேட் அக்லி’ படம் ரசிகர்களிடத்தில் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதன் வெற்றிக்குப் பிறகு அஜித் கார் பந்தயத்தில் முழுமையாக கவனம் செலுத்தி வருகிறார். தன் சொந்த பெயரில் ‘அஜித் கார் ரேசிங்’ நிறுவனத்தை உருவாக்கி, துபாய், பெல்ஜியம் உள்ளிட்ட நாடுகளில் நடைபெற்ற சர்வதேச போட்டிகளில் பங்கேற்று பரிசுகள் பெற்றுள்ளார்.

அஜித்தின் அடுத்த படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாக உள்ளது. இது முழுமையான வர்த்தக பொழுதுபோக்கு படமாக அமையும் என கூறப்படுகிறது. தயாரிப்புப் பணிகள் இன்னும் தொடங்காத நிலையில், ஓய்வு எடுத்த நடிகர், தன் மனைவி ஷாலினி மற்றும் குழந்தைகளுடன் பாலக்காடு அருகே உள்ள பகவதியம்மன் கோவிலுக்கு சென்றார்.

அங்கே குடும்பத்தோடு வழிபட்டபோது, மேலாடை இன்றி நிற்கும் அஜித்தின் படம் ரசிகர்களால் பரவலாக பகிரப்பட்டது. அதில் அவரது வலது மார்பில் பச்சையாக குத்திக் கொண்டுள்ள டாட்டூ அஜித்தின் குல தெய்வமான பகவதியம்மன் என தகவல்கள் கூறுகின்றன.

அஜித்தின் அந்த டாட்டூ புகைப்படம் சில மணி நேரங்களிலேயே இணையத்தில் ஆயிரக்கணக்கான பகிர்வுகளை பெற்று வைரலாகியுள்ளது.

Related posts

ரஜினி – கமல் படத்தின் புரோமோ!

மகா சிவராத்திரி விழா – நடிகைகள் தமன்னா, ஸ்ரீநிதி, சாரா பங்கேற்பு

“ஜனநாயகன்” படத்தின் சென்சார் விவகாரம் தொடர்பான வழக்கு வாபஸ்