விஜய் பங்கேற்கும் கூட்டத்தில் துப்பாக்கியுடன் வந்த நபரால் பரபரப்பு

A man with a gun meeting attended by Vijay

புதுச்சேரி, டிசம்பர் 09:

புதுச்சேரியில் இன்று நடைபெறும் தமிழக வெற்றிக் கழகத்தின் பிரசார கூட்டத்தில் துப்பாக்கியுடன் ஒருவர் நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

புதுச்சேரி துறைமுக மைதானத்தில் நடைபெறவிருக்கும் விஜய் மக்கள் சந்திப்பு கூட்டம், கடந்த கரூர் சம்பவத்துக்குப் பிறகு முதன்முறையாக நடிகர் விஜய் நேரில் கலந்துகொள்ளவிருப்பதால் பலத்த பாதுகாப்புடன் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள சுமார் 5,000 பேருக்கு மட்டுமே க்யூஆர் கோட் மூலம் அனுமதி அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.

கூட்டம் நடைபெறும் இடத்திற்கும் சுற்றுப்புறத்திற்கும் பலத்த போலீஸ் பாதுகாப்பு விதிக்கப்பட்டு, உள்ளே பாஸ் வைத்திருப்பவர்கள் மட்டுமே நுழைய அனுமதிக்கப்படுகின்றனர். இதன்மூலம் கூட்டம் அமைதியாக நடைபெறுவதை உறுதி செய்ய முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில், காலை பிரதான நுழைவாயிலில் வெள்ளை சட்டை அணிந்த ஒருவன் அடையாளப்பத்திரம் காட்டாமல் நுழைந்தபோது, போலீசார் மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை செய்ய முனைந்த போது, அந்த நபரின் இடுப்புப் பகுதியில் இருந்து சப்தம் எழுந்து, அவரிடம் துப்பாக்கி கிடைத்தது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தற்போது அந்த நபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

திமுக – காங்கிரஸ் கூட்டணி குறித்த இறுதி முடிவு கார்கேவிடம் ஒப்படைப்பு

பிரதமா் மோடி பிப்.28-இல் தமிழகம் வருகை!

கேரளாவுக்கு ஒரு நீதி..மேற்கு வங்காளத்திற்கு ஒரு நீதியா? மம்தா பானர்ஜி ஆதங்கம்