19
திருப்பூர், டிசம்பர் 30:
திருப்பூர் மாநகரில் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்த 5 கடைகளில் இருந்து 89 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
மத்திய பஸ் நிலையம் பின்புறம் காமாட்சி அம்மன் கோவில் வீதியில் மாநகராட்சி மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் இணைந்து சோதனை மேற்கொண்டனர்.
இந்த சோதனையில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்த 5 கடைகளுக்கு ரூ. 9 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் மீண்டும் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்தால் கடைகள் சீல் வைக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
பொதுமக்கள் துணிப்பைகள் பயன்படுத்த வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தினர்.